எருமை கன்றுகளுக்கு குடற்புழுநீக்கம்


  • எருமை கன்றுகளுக்கு தாயின் கருப்பறையில் இருக்கும் போதே தாயிடம் இருந்து உருளை புழு தொற்று ஏற்படுகிறது.
  • குடற்புழுநீக்கம் செய்யாத கன்றுகளில் வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும். 
  • இவ்வகை புழு தாக்கம் உள்ள கன்றுகள் எதிர்ப்பு சக்தி குறைந்ததாகவும், பருவமடைதல் மிகவும் தாமதமாகவும் இருக்கும்.
  • இக்கன்றுகளை பிறந்த ஒரு வாரத்தில் கட்டாயமாக  குடற்புழுநீக்கம் செய்யவேண்டும்.
  • அருகில் உள்ள கால்நடை மருந்தக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று தகுந்த குடற்புழுநீக்க மருந்தினை அளித்திடவேண்டும்.
  • மேலும் விபரங்களுக்கு இந்த இணையத்தளத்தில் உள்ள கால்நடை மருத்துவர்களை அழைத்து ஆலோசனை பெறலாம்.